மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

சேந்தமங்கலம், ஜூன் 11: எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சியில், ஒன்றிய பொது நிதியில் இருந்து ₹10 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பிடிஓ.,க்கள் மகாலட்சுமி, சுகிதா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், முத்துக்கருப்பன், விமல், மகாமுனி,பெருமாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: