சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

 

விருதுநகர், ஜூன் 4: விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் விழிப்புணர்வு வாகனத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ராஜகுமார், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மீசலூர், சூலக்கரை, பட்டம்புதூர், எட்டப்பநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, பூசாரிபட்டி, தடங்கம், ஆர்.ஆர்.நகர், காமராஜபுரம், தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரி, அம்மாபட்டி, தாதம்பட்டி, கோவில்புலிக்குத்தி, சின்னராமலிங்காபுரம், அஞ்சம்பட்டி, மணிப்பாறைபட்டி ஆகிய ஊர்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக ஊழியர்கள் வழங்கினர். குமராலிங்கபுரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

The post சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: