மேலும் 129 வாகனங்கள் காப்பீட்டுச் சான்று இல்லாததற்காகவும், 123 வாகனங்களின் ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காகவும், 50 வாகனங்களில் வாகனப் புகைப் பரிசோதனை சான்று இல்லாத காரணத்தினாலும், 4 வாகனங்களில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இன்ஜினில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதற்காகவும், 749 வாகனங்களில் இதர விதிமீறல்களுக்காகவும் அபராதம் விதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, இந்த ஆய்வின் போது 104 வாகனங்கள் கடும் குறைபாடுகளுக்காக விடுவிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வாகன தணிக்கை மூலம் ரூ1,09,92,629 அபராதமாகவும், வரியாகவும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த கோடை விடுமுறையில் மாநிலம் முழுவதிலும் உள்ள 34,835 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மாவட்ட ஆய்வு குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. ஆவடியில் ஒரு பள்ளி பேருந்து ஆய்வு செய்யப்பட்ட போது அதனுடைய படிக்கட்டு உடைந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வின் போது இதுபோன்று குறைபாடு உள்ள பள்ளி பேருந்துகள் மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னரே தகுதிச் சான்று ஆய்விற்கு மீண்டும் உட்படுத்தப்படுகிறது. எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களில் தகுதிச் சான்று குறித்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகன உரிமையாளர்களிடம் ரூ1.09 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல் appeared first on Dinakaran.