கோவையில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்: தனியார் பேருந்துகளுக்கு அபராதம்

கோவை: கோவையில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தியிருந்த தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தனியார் பேருந்துகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தியிருந்த தனியார் பேருந்துகளில் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏர் ஹாரன்கள், மியூசிக்கல் ஹாரன்கள் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post கோவையில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்: தனியார் பேருந்துகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: