அப்போது பூனை ஒன்று சாலையின் இடையே ஓடியது. இதை பார்த்த 3 நாய்களில் ஒன்று பூனையை கடிக்க பாய்ந்தது. ஆனால் நாயை அதன் உரிமையாளர் விடவில்லை. ஒரு கட்டத்தில் நாய் உரிமையாளரிடம் இருந்து தப்பி பூனை குட்டி சென்ற பெட்டிக்கடைக்குள் புகுந்தது. அப்போது கடையில் இருந்த சிறுமி நாயை கண்டதும் அலறி சத்தம் போட்டார். அப்போது நாய் பூனை குட்டியை கடித்து குதறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு படுகாயமடைந்த பூனைகுட்டியை கருணாகரன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து பெட்டிக்கடை உரிமையாளர் கருணாகரன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் எனது பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியை கடிக்க முயன்றதாகவும், பிறகு பூனை குட்டியை கடித்த நாய் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி, நாய் உரிமையாளர்களான ஜெயா, தனசேகர், புருஷோத்தமன் ஆகியோர் மீது ஐபிசி 289, 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியைஅச்சுறுத்தி பூனையை கடித்த விவகாரம்: நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.