தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மாநில பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: