செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்க தீவிரம் காட்டும் உரிமையாளர்கள்!!

சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுவரை 930 பேருக்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 10 மாதத்தில் இதுவரை 272 பேர் மட்டுமே செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்ற நிலையில், உரிமம் பெறுவது கட்டாயம் என்ற மாநகராட்சியின் அறிவிப்பை அடுத்துச் செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வாங்க தீவிரம் காட்டும் உரிமையாளர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: