78 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் செனகலில் உள்ள பிளேஸ் டியாக்னே சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து திடீரென சறுக்கி விழுந்தது. விமானம் புறப்படும் போது ஹைட்ராலிக் கோளாறு காரணமாக விமானத்தின் இடது இறக்கை மற்றும் என்ஜினில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானி உட்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக மேற்கு ஆப்பிரிக்க விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையில் விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.