மேலும் இதன் மூலம் இந்தியாவை அவமதிக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய தேசம் குறித்த புரிதல் மற்றும் அதன் வரலாறு குறித்து அறியாமல் அமெரிக்கா பேசி வருகிறது என்றும் இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருவதாகவும் கட்டமாக குறிப்பிட்டார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட முயன்றதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு அளவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.