கொதிக்கும் எண்ணெயை கணவர் தலையில் ஊற்றி கொன்ற மனைவி கைது

நெல்லை: நெல்லை அருகே பர்கிட்மாநகர் எம்ஜிஆர்2 நகரைச் சேர்ந்தவர் சிவன்பெருமாள்(40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (34). 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றிக் கொண்டதாக கூறி சிவன்பெருமாளை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிவபெருமாளின் தாயார் பேச்சியம்மாள், போலீசில் அளித்த புகாரில் கலைச்செல்வி தான் சிவன் பெருமாள் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து கலைச்செல்வியை பிடித்து விசாரித்ததில், அவர்தான் கணவர் தலையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ேநற்றிரவு போலீசார் அவரை கைது செய்தனர்.

The post கொதிக்கும் எண்ணெயை கணவர் தலையில் ஊற்றி கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: