கண்மாயில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகப்பேரியை சேர்ந்த செண்பகராஜ் மகன் பாண்டியராஜன் (25), கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் கண்மாயில் நடந்து சென்ற போது பின்தொடர்ந்து வந்த இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியராஜனை கொன்ற சதீஷ் (22), அவரது நண்பர் மதன் (24) ஆகியோர் கைது செய்து விசாரித்தனர்.

அதில், சதீஷ் மும்மையில் இட்லி கடை வைத்து உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களை கேலி செய்த விவகாரம் தொடர்பாக சதீஷூக்கு பாண்டியரானுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ் ஊருக்கு வரும்போது அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஊருக்கு சதீஷ் ஊருக்கு வந்தபோது, பாண்டியராஜனை வெட்டிக் கொன்றது தெரிந்தது.

The post கண்மாயில் நடந்து சென்ற வாலிபர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: