கூட்டணி இல்லாமல் 3வது முறையாக தேர்தல் களம் காணும் முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தொகுதிகளிலும் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆங்காங்கே பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் சந்திரபாபு தலைமையிலான பாஜ, ஜனசேனா கூட்டணியினர் இதுவரை வலுவான பிரசாரத்தில் ஈடுபடவில்லை எனக்கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளும், 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 தொகுதிகளும் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த தொகுதிகளில் நட்சத்திர பேச்சாளர்கள் இதுவரை பிரசாரம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பலமுறை வந்து பிரசாரம், ரோடு ஷோக்களை நடத்தினார்.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், அண்டை மாநிலங்களில் பலமுறை ரோடு ஷோ, பிரசாரம் என பிரதமர் மோடி வந்து சென்றார். அதே ஆர்வத்தை ஆந்திராவில் காட்ட மறுக்கிறார். பிரசாரத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை மோடி, அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆந்திராவுக்கு வந்து பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. தற்போது வரை பிரசாரம் குறித்த திட்டத்தை தெரிவிக்கவில்லை. தேர்தல் அறிக்கையை சந்திரபாபு நாயுடு வெளியிடும்போது பாஜக நிர்வாகி அனைவரின் முன்னிலையில் வாங்க மறுத்து ஒதுங்கினார். கர்நாடகாவில் பாஜ கூட் டணியில் உள்ள மத சார்பற்ற ஜனதா தள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரதமர் மோடிக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தயக்கம் காட்டலாம் என தெரிகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.
The post கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம் எதிரொலி ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு? சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’ appeared first on Dinakaran.