தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை: சென்னையில் இருந்து இன்று கோவை வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராங் ரூம்களில் நேற்று கேமராக்கள் செயல்படாமல் 20 நிமிடம் செயல் இழந்து விட்டது.

எந்தவித சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும். பாஜவை சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் கோவை, நீலகிரி, தென் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: