அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு..!!

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டதால் மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கப்பட்டது. சாலை துண்டிப்பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைக்கும் வரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: