இந்தநிலையில் நேற்று பிற்பகல் தங்களது பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சஞ்சய் (21) என்பவருடன் ஒரே பைக்கில் ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்ற கவீன் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற பிரவீன், தக்ஷன் ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.
உயிருக்கு போராடியபடி அவர்கள் தத்தளிப்பதை கண்ட சஞ்சய் நண்பர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் தேடி 3 மாணவர்களையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.