ஒப்புகைச்சீட்டு வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மக்களவை தேர்தலில் EVM- ல் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளையும் ஒப்பீடு செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டது. விவிபேட் மைக்ரோ கண்ட்ரோலர் தொடர்பாக சில சந்தேகங்கள் உள்ளதாக நீதிபதிகள் கருது தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஒப்புகைச்சீட்டு வழக்கில் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: