மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை

மதுரை: மதுரை, ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது நண்பர், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனைமுத்து (28). இவர், நாராயணபுரத்தில் தங்கியுள்ளார். கார்த்திக், சோனைமுத்து இருவரும் சேர்ந்து மதிச்சியத்தில் துணிகள் தேய்க்கும் கடை நடத்தி வந்துள்ளனர். இருவரும் நேற்று காலை மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது திருவிழா கூட்டத்தில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல், கார்த்திக், சோனைமுத்து ஆகியோரை கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.இதில் சோனைமுத்து பலியானார். கார்த்திக் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து, மதிச்சியம் போலீசார் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சதீஷ் உட்பட 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கார்த்திக்கின் மனைவியும், சதீஷூம் நட்புரீதியாக, சில நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இது கார்த்திக்கிற்கு பிடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குத்தியுள்ளனர்’’ என்றனர்.

The post மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: