திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 110 அடி உயரமும், 47 அடி அகலமும், 500 டன் எடை கொண்ட பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனால் தேரோட்டம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தேரோட்ட பணியாளர்கள், பெரிய ஜாக்கிகளை கொண்டு தேரின் சக்கரம் மேலும், பள்ளத்தில் இறங்காமல் இருக்க தேரை தரைமட்டத்திற்கு உயர்த்தினர். பள்ளத்தில் இருந்து மீட்க சம்பவ இடத்திற்கு உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர், முன்சக்கரத்தை இயந்திரங்கள் உதவியோடு தூக்கி நிறுத்தினர். சாலையில் திடீர் ஏற்பட்ட பள்ளத்தில் பெரிய கருங்கல், ஜல்லி கற்கள், சிமெண்ட் கலவைகள் கொண்டு நிரப்பப்பட்ட பின்னர், தேரின் சக்கரங்கள் ஓட ஏதுவாக, பள்ளத்தின் மீது பெரிய தடிமனான ஒரு இரும்பு பிளேட்டை வைத்து அதற்கான பணிகளை விரைவுபடுத்தினர். பின்னர் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் பிற்பகல் 12.15 மணியளவில் தேரோட்டம் மீண்டும் தொடங்கியது.
The post 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர் appeared first on Dinakaran.