கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

விருத்தச்சாலம்: கள்ள ஓட்டு போட முயற்சித்த விவகாரத்தில் பாஜ நிர்வாகியை கண்ணத்தில் அறைந்த அதிமுக பிரமுகரை வீடு புகுந்து பாஜவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(38). பாஜ ஒன்றிய பொருளாளர். அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தேவேந்திரன் (53). அதிமுக உறுப்பினர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, தேவேந்திரனின் உறவினர் முருகன் மகன் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் ஓட்டை போடச் சென்றபோது, அதனை இளையபெருமாள் மகன் பாஜ ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து தடுத்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தேவேந்திரன் உறவினர் செல்வக்குமார் மணிகண்டனை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உறவினர்களான ராமசாமி மகன்கள் ராஜாராமன், ராஜேந்திரன், வீரபத்திரன் உள்ளிட்டோர் சேர்ந்து, தேவேந்திரன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.

அதில் தேவேந்திரன், அவரது மனைவி கற்பகவல்லி, மகள் ராணி, பேத்தி ஆகியோர் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பாஜ ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மகன் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் ராமசாமி மகன் மணிகண்டன், ஏழுமலை, எழில் மற்றும் சிலர் மீதும், பாஜ ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், அவரது மனைவி சின்னபொண்ணு, ஆதரவாளர்கள் செல்வகுமார், தேவேந்திரன், ராஜவேல், அகிலரசன் ஆகியோர் மீதும் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: