நேற்றிரவு 11 மணி அளவில் அங்குள்ள எச் பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நந்தா தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த 10 பேர், நந்தாவை சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற தயாள்ராஜ், மேனகா ஆகியோரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சிறுவன் உள்பட 3 பேரை எதற்காக வெட்டினர் என்று விசாரிக்கின்றனர்.
The post செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது சிறுவன் உட்பட 3 பேருக்கு வெட்டு: வியாசர்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.