கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கைது..!!

கோவை: கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரத்தில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. என்.எஸ்.கே தெரு அருகே ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். கல்லாமேட்டை சேர்ந்த அப்பாஸ், பிரகதீஷ், முபில் செட்டிவீதியை சேர்ந்த சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: