புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வீட்டில் 54 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் லட்சுமி வீட்டில் நேற்று நள்ளிரவு பீரோவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நகை கொள்ளை குறித்து ஏனாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.