அப்போது கரையிலிருந்து கடலில் நின்று கொண்டிருந்த தலா 20 குதிரைத்திறன் கொண்ட 2 மோட்டார்கள் பொருத்திய பைபர் படகில் மூட்டை, மூட்டையாக பீடி இலைகளை 4 பேர் ஏற்றியதை கவனித்தனர். உடனே கடல் பகுதிக்கு சென்று அந்த நபர்களை சுற்றி வளைத்தனர். அதில் 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒரு நபர் மட்டும் சிக்கினார். விசாரணையில் அவர் தூத்துக்குடி, திரேஸ்புரம், சிலுவையார் கோயிலைச் சேர்ந்த அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர் தன்னை தூத்துக்குடியிலிருந்து 3 பேர் அழைத்து வந்ததாகவும், அவர்கள் ரூ.5 ஆயிரம் தந்ததாகவும், இந்த பண்டலில் என்ன பொருள் உள்ளது? என்பது தனக்கு தெரியாது என்றும் கியூ பிரிவு போலீசில் தெரிவித்தார்.
போலீசார் நடத்திய சோதனையில் தலா 30 கிலோ எடை கொண்ட 80 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. தண்ணீரில் நனையாதவாறு அவைகள் ‘பேக்’ செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 2.40 டன் எடை கொண்ட இந்த மூட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பைபர் படகும் கைப்பற்றப்பட்டது. பைபர் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் பீடி இலைகளும், பைபர் படகும் தூத்துக்குடி சுங்கத்துறையிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். காயல்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு 2.40 டன் பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல் appeared first on Dinakaran.