நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகவில்லை. மாறாக, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார்.அத்தகைய மனுவில்
10 நாள் அவகாசம் கேட்டு நயினார் கடிதம்
விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் போலீசுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பி இருந்தார். சட்ட விதிகளின்படி அவகாசம் அளிக்கப்பட்டு மேலும் ஒரு சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்..!! appeared first on Dinakaran.