முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக அளித்த ஆய்வறிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு

சென்னை: முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக அளித்த ஆய்வறிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய நிலஅளவைத் துறை ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை என்று இந்திய நிலஅளவைத் துறை ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. நீர்ப்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளதாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக அளித்த ஆய்வறிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: