மருந்து சோதனை ஆய்வகக்கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 24ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வாளர்கள் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரம் எஸ்எம்எஸ், இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இவர்களுக்கு எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. அதேசமயம் வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
The post மருந்து சோதனை ஆய்வகத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு வரும் 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.