ட்ரம்ப் மீதான குற்றவியல் விசாரணையில் தீர்ப்பை வழங்குவதற்காக 12 நீதிபதிகள் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது. 7 ஆண் நீதிபதிகளும் 5 பெண் நீதிபதிகளும் கொண்ட இந்த குழு அறிவிக்கப்ட்ட சிறிது நேரத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே ஒருவர் திடீரென தீக்குளித்தார். இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த போலீசார் தீயை அணைத்து அவரை மீட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவதால் நீதிமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அதனை மீறி நடைபெற்றுள்ள தீக்குளிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
The post அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!! appeared first on Dinakaran.