இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக

மேட்டூர்: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நேற்று காலை விறுவிறுப்பாக துவங்கியது. குஞ்சாண்டியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் மன்னன் டாக்டர். பத்மராஜன் முதல் நபராக வந்து காத்திருந்து, தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில், ‘எனது சாதனைக்காக இந்த தேர்தலில் 240வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்து களத்தில் உள்ளேன். தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே, எனக்கு கள நிலவரம் தெரியும். இது எனக்கு சந்தோஷமான 240வது தோல்வி,’ என்றார்.

The post இது எனது 240வது சந்தோஷமான தோல்வி: தேர்தல் மன்னன் லகலக appeared first on Dinakaran.

Related Stories: