அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.280 குறைந்தது

சென்னை: அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனையானது. இது வரலாற்றில் உச்சப்பட்ச விலையாகும். அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது. இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலால் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு காரணமாக நகை விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.280 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: