தொழிலதிபர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரில் வசிப்பவர் புரந்தரதாசன். தொழிலதிபரான இவரது வீட்டின் 3 மாடி கொண்ட கீழ்தளத்தில் இவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ.64.60 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். இப்பணம் கடந்தாண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக புரந்தரதாசன் தெரிவித்து, அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் ரூ.64 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.

 

The post தொழிலதிபர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: