வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏப்.26-ல் தீர்ப்பு வழங்குகிறது. அகில இந்திய மல்யுத்த சங்க தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: