அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து ஏப்ரல் 26ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாகா குழு விசாரணை நடத்த முடியாது. வேறு ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்று மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
The post மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கில் ஏப்.26ல் தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.