இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி , கன்னியாகுமரி , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தி வரும் நிலையில் இவ்வாறு மழை பெய்வது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களிள் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.