திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள் சித்திரை பிரம்மோற்சவ விழா: வெள்ளி சூர்யபிரபை வாகனத்தில் உற்சவர் உலா

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ 2ம் நாள் விழாவில் உற்சவர் வெள்ளி சூர்யபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 10 நாட்கள் நடைபெற உள்ள உற்சவ விழாவில் இரண்டாம் நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சூர்யபிரபை வாகனத்தில் எழுந்தருளினார். சாமிக்கு தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க மலைக்கோயில் மாடவீதிகளில் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவர் பூத வாகன சேவை நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

The post திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள் சித்திரை பிரம்மோற்சவ விழா: வெள்ளி சூர்யபிரபை வாகனத்தில் உற்சவர் உலா appeared first on Dinakaran.

Related Stories: