இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து முதல்வரின் குடும்பத்தை அவதூறாக பேசிய ராஜேந்திரன் (55) மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஜீவல்லால் நகரை சேர்ந்த திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் (60) ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான ராஜேந்திரன், அஜாக்ஸ் பரமசிவம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீசார் அவர்களை தேடி வருவது திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருவொற்றியூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் குடும்பத்தை விமர்சித்து பேசிய 2 அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.