பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பு

 

தேனி, ஏப். 15: தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக தேனி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.டி.நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை பெரியகுளம் நகர் வடகரை மற்றும் தென்கரை, பெருமாள்புரம், அழகர்சாமிபுரம்உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் ஆகியோருடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் திரண்டிருந்த மக்கள் வேட்பாளர் நாராயண சாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

ஆர் பி உதயகுமார் பேசுகையில், அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமிக்கு இது 40 ஆண்டு கால தவம். அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சுயநலத்திற்காக இரட்டை இலையை தோற்கடிக்க நினைக்கிறார்கள். இரட்டை இலை என்பது தேர்தல் சின்னம் மட்டுமல்ல. தேனி நாடாளுமன்ற தொகுதியின் முகவரி, விசுவாசம், வளர்ச்சி. அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.

இதில் முன்னாள் எம்.பி. பார்த்திபன், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், தேனி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, துணை செயலாளர்கள் சோலைராஜ், உஷாராணி, மாவட்ட பொருளாளர் வைகை பாண்டி, பெரியகுளம் நகர் செயலாளர் பழனியப்பன்,

ஒன்றிய பொறுப்பாளர் அன்னப்பிரகாஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு, தேனி நகரச் செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் பெரிய வீரன்,மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் அனுமந்தன், அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் சலீம், தேமுதிக ஒன்றிய செயலாளர் விஜய் பாண்டி, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அபூபக்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: