தொழிலாளி சடலமாக மீட்பு

சேந்தமங்கலம், ஏப்.14: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் இருந்து ஏழூர் செல்லும் சாலையில், தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்த வாலிபர், புதுச்சத்திரம் அடுத்த நவணி ஊராட்சி தொட்டிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி மோகன்ராஜ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: