யாரை எப்படி மதிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனது மூத்த அண்ணன் மு.க.ஸ்டாலின்; வேறு எந்த அரசியல் தலைவர்களையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை. இங்கு தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது தாக்குதல் நடத்துகிறார் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சென்றுள்ளது, பலரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். தேர்தல் பத்திர ஊழல் மற்றும் பாஜகவின் வாஷிங் மெஷின் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார்; அது எப்படி நடக்கிறது என விளக்குகிறேன்; நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியை விட பொருளாதார ஏற்றத்தாழ்வு இப்போது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
The post தற்போது நடப்பது மோடியின் அரசு அல்ல; அதானியின் அரசு: ஏழை மக்களுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை: கோவையில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.