அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன் எடுத்து மத்வால் பந்துவீச்சில் டேவிட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி 3.4 ஓவரில் 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி – ரஜத் பத்திதார் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். அதிரடியாக விளையாடிய ரஜத் பத்திதார் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. ரஜத் 50 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் இஷான் வசம் பிடிபட்டார்.
அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். எனினும், டு பிளெஸ்ஸி – தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். டு பிளெஸ்ஸி 61 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். மகிபால் லோம்ரர் (0), சவுரவ் சவுகான் (9), விஜய்குமார் (0) ஆகியோர் பும்ராவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அணிவகுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. தினேஷ் கார்த்திக் 53 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஆகாஷ் தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 5, கோட்ஸீ, மத்வால், கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது.
The post டு பிளெஸ்ஸி 61, ரஜத் 50, கார்த்திக் 53*; ராயல் சேலஞ்சர்ஸ் 196 ரன் குவிப்பு appeared first on Dinakaran.