தேர்தல் நெருங்கும்போது சில குறிப்பிட்ட இஸ்லாமிய தலைவர்களை அழைத்து பேசி, உங்களுக்கு என்ன வேண்டும் என பாஜ கேட்கிறது. நான் பாஜவுக்கு சொல்வது, நீங்கள் அழைத்து பேசும் மக்களுக்கு எதுவும் வேண்டாம். அன்பு ஒன்று மட்டும் போதும். நாம் ஒற்றுமையாக இருந்தால் யாரும் நமக்கு தீமை செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும்வரை யாரும் உங்களுக்கு தீமை செய்ய விட மாட்டேன். நான் அவர்களுடன் சண்டையிடுவேன். நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார். ஆனால் நாட்டின் பெயரில் மக்கள் சித்ரவதை செய்வதை பொறுத்து கொள்ள முடியாது” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரை பாஜ மிரட்டுகிறது
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிபிஐ, ஈடி, ஐடி, என்ஐஏ போன்ற ஒன்றிய அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சியினரை பாஜ மிரட்டுகிறது. நீங்கள்(பாஜ) புதிதாக சிறைகளை கட்டி அனைவரையும் சிறையில் அடையுங்கள். ஆனால் 140 கோடி மக்களையும் சிறையில் அடைக்க உங்களால்(பாஜ) முடியுமா?” என்று காட்டமாக கூறினார்.
The post ‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’ மே.வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சியை ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.