இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு

விராலிமலை, ஏப்.11:இலுப்பூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விராலிமலை ஒன்றியம் பூதகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமி காந்தன்(38). இவர் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விட்டு மீண்டும் இலுப்பூர்- விராலிமலை சாலையில் சென்று கொண்டிருந்த போது கோவிந்த நாயக்கன் பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 இளைஞர்கள் விஏஓ சென்ற வாகனத்தை வழிமறித்து அவரை தகாத வார்த்தைகள் சொல்லி தாக்கியதோடு அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் கண்,முகம் உள்ளிட்ட இடத்தில் காயமடைந்த விஏஓ இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து இது குறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் லட்சுமி காந்தன் அளித்த புகாரை தொடர்ந்து அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: