நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை

நாகப்பட்டினம், ஏப்.11: சிவசேனா உத்தவ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் நடந்தது. மூன்று மதங்களும் சங்கமிக்கும் நாகப்பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வை சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சி மாநில பொது செயலாளர் சுந்தர வடிவேலன் தலைமையில் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் நவ்ஷாத், காங்கிரஸ் தேசிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மீரா உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாநில மீனவர் அணி பொருளாளர் கல்லார் ரபீக், நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன், நாகப்பட்டினம் கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தையர்கள் சுவாமிநாதன், ராயல் பிரிட்டோ, நாகப்பட்டினம் ஜமாத் பொருளாளர் நவாப் ஜான், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆன்மிக பக்தர்கள் சபை மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.
இதேபோல நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

The post நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: