அணையில் மூழ்கி வாலிபர் சாவு

விருதுநகர், ஏப்.11: விருதுநகர் அருகே ஆணைக்குட்டம் அணையில் குளித்தவர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கவேல்(31). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக வீட்டில் கூறினாராம். பின்பு, சக நண்பர்களான திவகர், சதீஸ்குமார் ஆகியோருடன் ஆணைக்குட்டம் அணைக்கு குளிக்க சென்றார். அங்கு திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், தங்கவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அணையில் மூழ்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: