பழங்குடியின மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி

பந்தலூர், ஏப்.11: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி மற்றும் யுவ சைதன்ய கிளப் ஆகியோர் இணைந்து பழங்குடியினர் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியாளர் கண்ணன் மற்றும் பிஜோய் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியில் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பல்வேறு கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி சாதனையும் படைத்து வருகின்றனர்.

The post பழங்குடியின மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: