ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

தர்மபுரி, ஏப்.11: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், 30 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 45 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அந்த பயிற்சியின் நிறைவு விழா, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சி முடித்த 30 ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பு மரியாதையில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தண்டபாணி, ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, டிஎஸ்பி சத்தியமூர்த்தி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், போலீஸ் எஸ்ஐ பாருக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: