டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 3ம் தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது 2 பேரின் உடமைகளை ஆய்வு செய்ததில், 5.04 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் அடங்கிய 13 பாக்கெட்டுகள் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்த ஆய்வில் அது ஹெராயின் போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.35 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: