வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

 

சிவகங்கை, ஏப். 10: சிவகங்கை அருகே மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50ஆ யிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செலப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை அருகே கொல்லங்குடியில் இருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் மைலாவதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டரசன்கோட்டையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வந்த டூவீலரை சோதனையிட்டனர். அதில் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

The post வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: