நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீன்ஸ் விலை உயர்வு: நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

 

ஊட்டி, ஏப்.10: நீலகிரி மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பின் பீன்ஸ் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் மற்றும் பல்வேறு மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவு பயிரிடப்படுகிறது.

இந்த காய்கறிகளுக்கு எப்போதும் ஓரளவு விலை கிடைக்கும். சில சமயங்களில் அதிகபட்ச விலை கிடைக்கும். இது போன்ற சமயங்களில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தில் புஷ் பீன்ஸ், கொடி பீன்ஸ், வாட்டக்ஸ், பென்னி பீன், கறி பீன்ஸ், சாட்டை மற்றும் போல் பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பீன்ஸ் வகைகளுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும்.

கடந்த சில மாதங்களாக பீன்ஸ் விலை சற்று குறைந்து இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பென்னி மற்றும் புஷ் பீன்ஸ் போன்றவைகளுக்கு அதிக விலை கிடைத்து வருகிறது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் 100 வரையில் கிடைக்கு வருகிறது. இதனால், பீன்ஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக விலை கிடைக்கும் நிலையில், அறுவடையிலும் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீன்ஸ் விலை உயர்வு: நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: