பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரத்தில் பேரணி

நாசரேத், ஏப். 10: பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் நடந்த பேரணியை சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பேரணி நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து பேரணியை தொடங்கி வைத்தார். பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ் முன்னிலை வகித்தார். ஆலயத்தில் தொடங்கிய பேரணி மெயின்ரோடு, சாலைத்தெரு, தெற்கு தெரு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதையடுத்து பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. லோவிசா, அலீஸ்பாப்பா ஆகியோர் வேதப்பாடம் வாசித்தனர். தூத்துக்குடியை சார்ந்த ஏஞ்சல், செய்தி கொடுத்தார். இதில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரகாசபுரம் சேகர தலைவர் நவராஜ் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி, பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் நல்லம்மாள் மார்க்கெட், சரோஜா மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

The post பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரத்தில் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: