காங். வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரியில் நாளை பிரசாரம்

நாகர்கோவில், ஏப்.10: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, திமுக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் மற்றும் திறந்தவெளி வாகன பிரசாரம் மூலம் வாக்குகள் சேகரித்து வருகின்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ‘இந்தியா’ கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-க்கு வாக்குகள் சேகரிக்க வருகிற 11ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வடசேரி, அண்ணா சிலை அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாகன பிரசார கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்ற உள்ளார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுகவினர், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கார் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளை வரும் அவருக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் குழித்துறையில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்டை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

The post காங். வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரியில் நாளை பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: